வியாழன், 27 மே, 2010

இன்றையச் செய்திகள்

செய்தி-1
                 விரும்பிய பொழுதெலாம் கேட்டுக் கொள்வதற்காக
                 பறவைகளின் மொழிகளை
                 அலைபேசியில் பிடித்து வைத்தேன்
                  நினைவுகளில் கரைந்துகொண்டிருக்கிற
                 அதனுடைய மூலங்களை கண்டுகளிக்க
                 சென்ற இடமெல்லாம் சென்ற இடமெலாம்
                  ஒலிகள் மட்டுமே மிஞ்சியிருக்க
                  பறவைகளைக் காணவில்லை

செய்தி-2
                 நூறுக்கும் மேற்ப்பட்ட ஆண்டுகளை
                 நடந்தே கடந்து பழக்கப் பட்டவன்
                  சலித்துப் போய்
                 கால்களை மடக்கிவைத்து
                 உந்துகளில் கடக்கத் தொடங்கினேன்
                 வேகமாயபோயும்
                  ஐம்பதுகளில் முடிந்துபோகிறேன்


செய்தி-3
                  வெங்காய வாடை நாவைதூண்ட
                  கஞ்சிக் கலயத்தை திறந்துபார்த்தேன்
                  சோறு மட்டும் மிஞ்சியிருக்க
                  நீராகாரம் உறிஞ்சப்பட்டு
                   உணவறைகளின் குடுவைகள் தோறும்
                   மருந்துகளால்
                   நிரப்பப் பட்டிருக்கின்றன
                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக