செவ்வாய், 11 மே, 2010

சிலுவை மீதேறிய சுமை

குறுக்கையில் வழியும் இயேசுவின் 
குருதியை குடிப்பதற்காய் 
பூனைகள் பதுங்கியிருக்கும் 
ஆலயத்தில் அடைக்கலம் தேடி 
புகுந்த எலிகளின் பசிக்கு 
அப்பங்கள் கிடக்க 
பூனைக்கும் எலிக்குமிடையிலான
தடுப்பில் ஏறிநின்ற குரங்கொன்று 
இரண்டும் 
சண்டையிடும் காலத்திற்காய் 
காத்துக்கிடக்கின்றது  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக