வியாழன், 27 மே, 2010

நவீனப் பார்ப்பனியம்

பார்ப்பன அவைகளைப் 
பின்னுந்தியோடும் 
உருளிக்குள் மறைந்த ஆரங்களாய் 
கணக்கற்றுக் கரையுமென்
கண்ணியச் சமர்களின் 
வீரியம் விழுங்கி வினைமிளிர்ந்து 
வயிறுபுடைத்து வன்ம சூழ்கொண்டு 
அலையும் நாயின் நாவில் வடியும் 
திரவக் குடுவைகளின் கொதிநிலையில் 
காவிச் சுவர்கொண்ட ஆய்வுக் கூடங்களில் 
மரபீநிமாற்றுத் தொழில்நுட்பத்துடன்
நன்செய் நிலமெங்கும் விதைக்கபடுகின்றன 
புதிய புதிய
பார்ப்பன அவர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக