புதன், 19 மே, 2010

நெகிழ்ச்சி

நெகிழ்ச்சி
தமிழ் முதல்வன்

வெளியேற்றப்பட்ட விந்தின்
அமைதிச் சுற்றிவளைப்பில்
தணியும் எழுச்சி

ஒளிச்சேர்க்கை நிகழ்வில்
கசியும் நீர்ப்பெருக்கம்
விரியும் இலை

உதிர மறுத்து
நிரம்பும் மகரந்த வாசனை
நிலம் கவ்வும்
முகில் கூட்ட ஆகாயம்

இதங்களின் நிகழ்வில்
இறுக்கம் மிகுந்து
விரிந்து பரந்த நெஞ்சு
இறகுகளாய் பறக்கின்றன
ஒளித் துகளினிடையில்

குலை நடுங்க                                                         
வேலிகள் உணர்கின்றன
 குருக்கெதிர் மாற்றங்கள்

எல்லாம் உணர்ந்துகொண்டு
உடற்பயிற்சி செய்கின்றன
ஓணான்கள்
t.muthalvan@gmail.com
நன்றி- உயிரோசை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக