நெகிழ்ச்சி | ||||
| ||||
வெளியேற்றப்பட்ட விந்தின் அமைதிச் சுற்றிவளைப்பில் தணியும் எழுச்சி ஒளிச்சேர்க்கை நிகழ்வில் கசியும் நீர்ப்பெருக்கம் விரியும் இலை உதிர மறுத்து நிரம்பும் மகரந்த வாசனை நிலம் கவ்வும் முகில் கூட்ட ஆகாயம் இதங்களின் நிகழ்வில் இறுக்கம் மிகுந்து விரிந்து பரந்த நெஞ்சு இறகுகளாய் பறக்கின்றன ஒளித் துகளினிடையில் குலை நடுங்க வேலிகள் உணர்கின்றன குருக்கெதிர் மாற்றங்கள் எல்லாம் உணர்ந்துகொண்டு உடற்பயிற்சி செய்கின்றன ஓணான்கள் t.muthalvan@gmail.com நன்றி- உயிரோசை |
புதன், 19 மே, 2010
நெகிழ்ச்சி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக