செவ்வாய், 11 மே, 2010

நன்றி மறதிகள்

நிறமற்ற வெளிச்சம் வீசும் 
உச்சிப் புயலின் எதிர் திசையில் 
படியும் நிழலில் விழுந்த 
வியர்வை குடித்த மண்ணெங்கும் 
விளையும் மணிகளுக்குள் பொதிந்த என் 
உப்பின் உணர்வற்று நெளியும் 
நாக்குப் பூச்சிகள் 
மலவாயை விட்டு வெளியேறினால் 
செத்துவிடுவேன்  என்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக