வியாழன், 29 ஜூலை, 2010

மகிழ்ந்த காலம்

தெத்தூர் . மதுரைக்கு அருகிலுள்ள  மலைகள் சூழ்ந்த கிராமம். பெரும்பான்மையாக ஆதிக்க சாதியினரும் சிறிதளவு ஒடுக்கப்பட்டவர்களும் வாழும் சிற்றூர். விவசாய வாய்ப்பில்லாமலும் , வேறு வழியில்லாமலும் ஒடுக்கப் பட்ட மக்கள் மதுரை போன்ற நகரங்களைச் சார்ந்தே வாழும் சூழல். இரண்டு மாதங்களுக்கு முன்னர் மதுரையிலுள்ள பழைய திரையரங்குக் கட்டிடத்தை உடைக்கும் வேலை செய்தபோது சுவர் இடிந்து விழுந்து தெத்தூரைச் சார்ந்த பாண்டி என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். அவர் தவிக்க விட்டுச் சென்ற நான்கு பிள்ளைகளில் மூத்தவள் தந்தையின் நினைவிலேயே கடந்த மாதம் இறந்துவிட்டாள். பொருளாதார சூழலும் இரு பிள்ளைகளை பள்ளிக்குச் செல்லவிடாமல் செய்துவிட்டது. இவ்வாறு , தொடர்ந்து வந்த இழப்புக்களால் துவண்டுபோன குடும்பத்திற்கு ஆறுதல் சொன்னபோது மகிழ்ந்தார்கள்..அவர்களின் சிறு மகிழ்ச்சியில் நான் பேரு மகிழ்ச்சியடைந்தேன்..அம்மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அவர்களுடன் எடுத்துக் கொண்ட படம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக