புதன், 28 ஏப்ரல், 2010

வெளிச்சமற்ற ஒளிகள்-(கவிதை)



கண்கள் மேயும் கட்டாந்தரைப் பக்கங்களில்
முளைத்துக்கிடக்கின்றன பார்த்தீனியச் சொற்கள்
காலங்களை உறிஞ்சிப் பெருத்து
வேண்டிய இடங்கள்தோரும் ஈனப்பட்ட
சருகுச் சிந்தனை திணிக்கப்பட்ட
சலனமற்ற உறுப்புகளுடன் பொம்மெய்கள்
விளைநிலத்தின் பிளவுகள் தோறும் நின்றுகொண்டு
நிழல் வேடிக்கை செய்கின்றன

மூடிய இமைகளுக்குள் உருளும் விழிகளில்
தெரியும் திறந்தவெளிக் காட்சிகளில்
பிறரறியா சாகசங்களின் உண் மெய்கள்
அலங்கரிக்கப்படுகின்றன கவர்ச்சிச் சொற்களால்
அதை நோக்கி முடுக்குவதர்க்குத் தோதாய்
நடைமுறைகளை விழுங்கிவிட்டு
விருதுமலம் கழிக்கும் நிறுவனங்கள்

அசைவற்ற பரப்பில் அலைவரைந்து செல்கின்றன
தவளைவீச்சில் தாவிஎளும் கற்களை யறியா
எங்குமெதிலும் வளைந்து கொடுத்து நெளியும்
கண்களற்ற நச்சுப் பாம்புகள்
விளுங்கியதச் செரிக்க முடியாமல் வீராப்புச் செய்கின்றன
மண்ணோடுமண் ஆவதற்கு அணியமாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக