சனி, 12 ஜூன், 2010

சிலுவை மீதேறிய சுமை

குறுக்கையில் வழியும் இயேசுவின்
குருதியைக் குடிப்பதற்காய்
பூனைகள் பதுங்கியிருக்கும்
ஆலயத்தில் அடைக்கலம் தேடி
புகுந்த எலிகளின் பசிக்கு
அப்பங்கள் கிடக்க
பூனைக்கும் எலிக்குமிடையிலான
தடுப்பில் ஏறிநின்ற குரங்கொன்று
இரண்டும்
சண்டையிடும் காலத்திற்காய்
காத்துக் கிடக்கின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக