வியாழன், 28 அக்டோபர், 2010

ஆசிரியரின் வன்முறை

மதுரை டி.வி.எஸ்.(சுந்தரம்) பள்ளியில் ஆரம்பப் பள்ளி மாணவனை குறிப்பேடு
எடுத்து வராத காரணத்தால் சோமசுந்தரம் என்கிற ஆசிரியர் கன்னத்தில் ஓங்கி
அடித்துள்ளான். இச்சம்பவம் பள்ளி துவங்கும் முன்பே நடந்துள்ளது.மாணவரை
அடிக்கக் கூடாது என சட்டமே இருக்க சட்டத்தை மீறி  துளி இரக்கமும்
இல்லாமல் அடித்துள்ளான்.அந்தப் பையனின் கன்னங்களில் சோமசுந்தரத்தின்
ஐந்து விரல்கள் அப்படியே பதிந்துள்ளன.வீங்கியும் சிவந்தும் உள்ளது
அச்சிறுவனுடைய கன்னம். அழுதழுது சோர்ந்து போயிருந்தன அவனது கண்கள்.
அவனைக் கண்டவுடன் அதிர்ந்த நான் பள்ளியின் தொலைபேசியில்(0452-2673666)
என் கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்தேன்.இன்று காலையிலிருந்து என்
மனம் வருந்திக் கொண்டே இருக்கிறது.சிறுவன்மீது நிகழ்த்திய இவ்வன்முறையை
அனைவரும் கண்டிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக