புதன், 1 டிசம்பர், 2010

நெஞ்சைக் கவ்விய நந்தலாலா...

பல்வேறு காரணங்களால் சினிமா என்னைவிட்டு வெகுதொலைவில் இருந்தது. ஜனநாதன், வசந்தபாலன் போன்றோர் அருகில் அழைத்து வந்தார்கள். இப்பொழுது மிஷ்கின் 'நந்தலாலா' மூலம் சினிமாவைக் கட்டித் தழுவி நெடுநேரம் அழ வைத்துவிட்டார். தாயின் பாசத்திற்கு ஏங்கும் மனதுகளை இந்த அளவுக்கு யாரும் காட்டியதில்லை

செவ்வாய், 30 நவம்பர், 2010

சமூக சமத்துவப் படைத் தலைவரின் நேர்காணல்

 சமூக சமத்துவப் படை கட்சியின் தலைவர் சிவகாமி இ.ஆ.ப. அவர்களின் நேர்காணல் இது. கட்சி ஆரம்பிக்கப் பட்டதன் நோக்கம் ,தேர்தல் பாதையில் அது எதிர்கொள்ளும் சவால் ,இன்றைய அரசியல் சூழலில் ராசா விவகாரம் குறித்த அவரின் நிலைப்பாடு, பண்பாட்டு அரசியல் நிலைப்பாடு ஆகியவை குறித்து விரிவாகப் பேசிய காணொளி ....

சனி, 27 நவம்பர், 2010

தலித் அரசியல் எழுச்சி குறித்து நேர்காணல்...

 தலித் அரசியல் எழுச்சி அது ஏற்படுத்திய தாக்கம் குறித்து எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கத்துடன் நேர்கண்ட காணொளி.
YouTube - tmuthalvan's Channel

ஞாயிறு, 14 நவம்பர், 2010

ஞான அலாய்சியஸ் நேர்காணல்...

அயோத்திதாச பண்டிதரின் சிந்தனைகளைத் தொகுத்து வெளியிட்ட அறிவர் ஞான அலாய்சியஸ் அவர்களுடன் நடத்திய நேர்காணல்...
YouTube - tmuthalvan's Channel

திங்கள், 1 நவம்பர், 2010

வாழ்வு

வாழ்வு
வீடடையும் மனமுடுக்கத்தில்
முன் நகரும் பாதங்களால்
விழுங்கப் படுகின்றன
தெருவின் தூரங்கள்

பக்கவாட்டுத் திசைகளில் 
துரத்தப்படும் இணைத் தெருக்கள்தோறும்
இயங்குகின்றன
வீடடையும் மனங்கள்

அடைந்த வீட்டினுள்
எனக்குள் நுழைந்து விழுங்கப்பட்ட
தூரங்களில் நடந்தபொழுது

மளிகைக் கடைச் சாமான்கள்
ஆங்காங்கே சிதறிக் கிடந்தன
மதுப்புட்டிகளும் பிளாஸ்ட்டிக் குவளைகளும்
பெரும்பாலும் குவிந்துகிடந்தன
பல இடங்களில் நிறைந்து கிடந்தன
மருந்துகளும் மாத்திரைகளும்